வியாழன், 6 ஜனவரி, 2011

சோதுகுடி யில் வாழும் மக்களின் ஒற்றுமை


எங்கள் ஊரான சோதுகுடியில் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்துவர் என மும் மதத்தினர் வாழ்கின்றனர் உறவுகள் உண்மை என்று உணர்ந்த என் ஊர் மக்கள் மாற்று மத மக்களை மாமன் மச்சான் என்று அழைக்கின்றனர் இவ்வாறு அழைப்பதினால் உறவுகள் பலப்படும் உள்ளங்கள் தெளிவுபெரும் .

ஒரு சிறிய கிராமம்தான் சோதுகுடி ,


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஒரு சிறிய கிராமம்தான் சோதுகுடி , இந்த கிராமத்தில் பிறந்தவன் தான் நான் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை , என் ஊருக்கோ எல்லாமே பெருமை தான், பெருமை என்பது என் ஊருக்கு மட்டும் அல்ல என் ஊரில் பிறந்த ஒவொரு மனிதனுக்கும்தாம், அப்படிப்பட்ட பெருமை என்கின்ற உணர்வுகளை இத் தளத்தின் வாயிலாக பகிர்ந்து சொல்வதில் சந்தோசம் அடைகின்றேன் ..